search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜ்மீர் குண்டுவெடிப்பு"

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ரூ.2 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். #Ajmerblast
    அகமதாபாத்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த மூன்று நோன்பாளிகள் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சுவாமி அசீமானந்தா, பவேஷ் பட்டேல் உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடப்பட்டு வந்த நான்கு பேரில் மூன்றுபேர் தலைமறைவாக இருக்கின்றனர். கடந்த 2007-ம் ஒருவர் கொல்லப்பட்டார். இவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கு விசாரணையின்போது 149 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் பவேஷ் பட்டேல் ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், போலீசாருக்கு பயந்து கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சுரேஷ் தாமோதரன் நாயர் என்பவரை குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் அம்மாநில பயங்ரவாத தடுப்பு படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    தலைக்கு  2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இவர், அஜ்மீர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். #Ajmerblast  
    ×